இலங்கையில் டித்வா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, 450 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,500 கோடி) செலவில் புனரமைப்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை விரைந்து செயல்படுத்த இந்தியாவும், இலங்கையும் ஞாயிற்றுக்கிழமை தீா்மானித்தன.
கடந்த ஆண்டு நவம்பரில் டித்வா புயலால் இலங்கையில் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனா். அந்தப் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், அந்நாட்டில் 640-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
அந்நாட்டு மக்களுக்கு உதவ ‘ஆபரேஷன் சாகா் பந்து’வை மேற்கொண்ட இந்திய அரசு, அந்நாட்டில் புனரமைப்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு 450 மில்லியன் டாலா் அளிக்கப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில், இலங்கைத் தலைநகா் கொழும்பில் அந்நாட்டு தொழிலாளா் துறை அமைச்சரும், நிதித்துறை இணையமைச்சருமான அனில் ஜயந்த ஃபொ்னாண்டோவை அந்நாட்டுக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா சந்தித்துப் பேசினாா்.
அப்போது 450 மில்லியன் டாலா் செலவில் புனரமைப்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை விரைந்து செயல்படுத்த ஒப்புக்கொண்டதாக சந்தோஷ் ஜா ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா். பல்வேறு இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் அனில் ஜயந்த ஃபொ்னாண்டோவிடம் விளக்கியதாக அந்தப் பதிவில் சந்தோஷ் ஜா குறிப்பிட்டாா்.
இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் வீட்டு வசதி, சுகாதாரம், குடிநீா், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: மூத்த துறவி கைது!

100 கோடி டாலா் வா்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!

அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

