பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!

மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டது குறித்து...

News image

மனோஜ் குமார் அகர்வால், முதல்வர் சுவேந்து அதிகாரி - படம் - ஏஎன்ஐ

Updated On :1 மணி நேரம் முன்பு

மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகித்த மனோஜ் குமார் அகர்வால், மாநில அரசின் தலைமைச் செயலராக திங்கள்கிழமை (மே 11) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், அந்த மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுக்கால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.

மேற்கு வங்க கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான மனோஜ் அகர்வால் முன்னதாக, தேர்தல் ஆணையத்தால் கட்டாயமாக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குத் (எஸ்ஐஆர்) தலைமை தாங்கினார். இந்த நடவடிக்கையில் சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.

எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது, இதுமாதிரியான லட்சக்கணக்கான தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அது பல தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸின் வெற்றியைப் பாதித்ததாகவும் தேர்தல் ஆணையர் மீது முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

மேலும், வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என மமதா பானர்ஜி கூறியிருந்தார்.

இதனிடையே, ஆளுநர் ஆர்.என். ரவியால் அம்மாநில பேரவை கலைக்கப்பட்டு, புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகித்த மனோஜ் அகர்வால், மாநில அரசின் தலைமைச் செயலராக மாற்றப்பட்டது மேற்கு வங்க அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

Summary

Manoj kumar Agarwal, who served as the Chief Electoral Officer of West Bengal, has been appointed as the State Chief Secretary on Monday (May 11).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.