மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள்மீது குற்றம் சுமத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில், தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, மாக்ரஹாட் பாச்சிமில் 11, டைமனண்ட் ஹார்பரில் 4 என 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய மறுவாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தங்களை அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டி, ஃபால்டா பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகையால், இங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
While re-polling is underway in West Bengal, people have staged protests, leveling allegations against Trinamool Congress leaders.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு! பல்வேறு இடங்களில் வன்முறை!!

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு பயன்பாடு! என்ஐஏவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

