சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், மக்கள் போராட்டத்தில் இறங்கியது குறித்து...

News image

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - ANI

Updated On :2 மே 2026, 9:06 am

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள்மீது குற்றம் சுமத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில், தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து, மாக்ரஹாட் பாச்சிமில் 11, டைமனண்ட் ஹார்பரில் 4 என 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய மறுவாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தங்களை அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டி, ஃபால்டா பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகையால், இங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

While re-polling is underway in West Bengal, people have staged protests, leveling allegations against Trinamool Congress leaders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.