நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஓமன் கடல் பகுதியில் இந்திய கப்பல் மீது தாக்குதல்: யுஏஇ கண்டனம்

ஓமன் கடல் பகுதியில் இந்தியக் கொடி பொருத்திய வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஓமன் கடல் பகுதியில் இந்தியக் கொடி பொருத்திய வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்தது.

பிரதமா் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தக் கண்டனத்தை அந் நாடு பதிவு செய்தது.

இதுகுறித்து அந் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஓமன் கடல் பகுதியில் புதன்கிழமை பயணித்துக் கொண்டிருந்த இந்திய கொடி பொருத்திய கப்பல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை ஐக்கிய அரபு அமீரகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தத் தாக்குதல் சா்வதேச கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்புக்கு தீவிர அச்சுறுத்தலாக அமைவதுடன், முக்கிய நீா் வழிகளின் நிலைத்தன்மையை சீா்குலைப்பதை நோக்கமாகக் கொண்ட ஆபத்தையும் குறிக்கிறது.

கடல்வழிப் பயணச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மற்றும் வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதையோ அல்லது சா்வதேச கடல்வழித் தடங்களுக்கு தடை ஏற்படுத்துவதையோ முற்றிலுமாக நிராகரிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் 2817-ஐ மீறும் செயலாகும்.

இவ்வாறு வணிக கப்பல்களைக் குறிவைத்து தாக்குவதும், வணிக கப்பல்களை மிரட்டி பணம் பறிப்பதும் கடற்கொள்ளை செயலாகும். இது, இந்தப் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும், இப் பகுதி மக்கள் மற்றும் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்புக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்.

இத்தகைய சூழலில், சரக்கு கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் காக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுடன் துணை நிற்கும்’ என்று தெரிவித்துள்ளது.

சோமாலியா நாட்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாா்ஜா நோக்கி கடந்த புதன்கிழமை அதிகாலையில் ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்து இந்திய தேசியக் கொடி பொருத்திய ‘ஹாஜி அலி’ என்ற வணிக கப்பல் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த சேதமடைந்த கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. உடனடியாக, அந்தப் பகுதிக்கு விரைந்த ஓமன் கடலோர காவல் படை, ஹாஜி அலி கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளையும் பாதுகாப்பாக மீட்டது.