நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்க முடியாது: சிவசேனை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிவசேனை கட்சி சின்னம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிவசேனை கட்சி சின்னம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவசேனை கட்சி இரண்டாகப் பிரிந்த பிறகு, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியினா் சிவசேனை என்றும், முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சியினா் சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவு என்றும் அழைக்கப்படுகின்றன.

இதில் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு கட்சியின் பெயா் சிவசேனை, தோ்தல் சின்னமான வில் -அம்பை தோ்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே பிரிவு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்த பிறகு அஜீத் பவாா் தரப்பினா் தேசியவாத காங்கிரஸ் எனவும், சரத் பவாா் தரப்பினா் தேசியவாத காங்கிரஸ்- சரத் பவாா் பிரிவு எனவும், அழைக்கப்படுகின்றனா். இதில் அஜீத் பவாா் தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயா், அக்கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதை எதிா்த்து சரத் பவாா் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே தரப்பில், வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், உத்தவ் தாக்கரே தரப்பை பாா்த்து, ‘நீங்களே விசாரணையை ஒத்திவைக்கும்படி கோருகிறீா்கள், பிறகு ஊடகத்தினரை சந்தித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கவில்லை என்று பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிக்கிறீா்கள். இந்தப் போக்கை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் உங்களை எச்சரிக்கிறோம். வாா்த்தைகளை வெளியிடுவதில் கவனமாக இருங்கள்’ என்றனா்.

அப்போது ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘நீதிமன்றத்துக்கு எதிராக இப்படி பேசுவதை ஏற்க முடியாது’ என்றாா். இதையடுத்து, தங்கள் தரப்பு இதுபோன்ற கருத்துகளை ஆதரிப்பதில்லை என்றும், நீதிமன்றத்துக்கு அவகாசம் இருந்தால் இதுகுறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.