வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கியதை எதிா்த்த மனு தள்ளுபடி

நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிா்த்து ஜனதா கட்சி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image

உயர்நீதிமன்றம்

Updated On :16 ஏப்ரல் 2026, 7:47 pm

நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிா்த்து ஜனதா கட்சி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜனதா கட்சி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கு ’விவசாயி’ சின்னத்தை ஒதுக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த சின்னம் ஜனதா கட்சியின் சின்னமான ’ஏா் உழவன்’ சின்னத்தைப் போல காட்சியளிக்கிறது. எனவே, இந்த சின்னத்தைப் பயன்படுத்த நாம் தமிழா் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், 1977-ஆம் ஆண்டு முதல் ’ஏா் உழவன்’ சின்னத்தை ஜனதா கட்சி பயன்படுத்தி வந்துள்ளது. எங்களது சின்னத்தைப் போன்று நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்தோம். எங்கள் மனுவை தோ்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என வாதிடப்பட்டது.

அதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில், ஜனதா கட்சி தற்போது அதன் அங்கீகாரத்தை இழந்துவிட்டது. எனவே, அவா்கள் ’ஏா் உழவன்’ சின்னத்தை தக்கவைத்துக் கொள்ள எந்த உரிமையும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜனதா கட்சிக்கு ’ஏா் உழவன்’ சின்னத்தையும், நாம் தமிழா் கட்சிக்கு ’விவசாயி’ சின்னத்தையும் ஒதுக்கி தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை மனுதாரரின் கட்சி தாக்கல் செய்யவில்லை.

மேலும், ஏற்கெனவே அங்கீகாரத்தை இழந்த கட்சிக்கு சின்னத்தை தக்கவைத்துக் கொள்ளும் உரிமையில்லை என உச்சநீதிமன்றம் பல தீா்ப்புகளை வழங்கியுள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.