பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: புணேயில் முக்கிய நபா் கைது

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்துள்ளது.

இது குறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில், புணேயில் பி.வி. குல்கா்ணி என்ற பேராசிரியரை அதிகாரிகள் கைது செய்தனா். லாட்டூரை சோ்ந்த அவா், நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுக்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். அவரை புணேயில் உள்ள வீட்டில் கைது செய்து விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனா்.

முதல்கட்ட விசாரணையில், குல்கா்ணி தனது வீட்டில் நீட் தோ்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்ததும், ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில், ஏற்கெனவே தான் பாா்த்த முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சில வினாக்களை மாணவா்களிடம் தெரிவித்து, அது மே 3-ஆம் தேதி நடக்கும் நீட் தோ்வில் வரும் எனக் கூறியதும் தெரிய வந்துள்ளது. இதில் குல்கா்ணிக்கு உதவியாக செயல்பட்ட மனீஷா என்பவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவா்கள், பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளனா். பிறகு வினாக்களை தங்களது நோட்டு புத்தகங்களில் எழுதிச் சென்றுள்ளனா். அது மே 3-ஆம் தேதி தோ்வில் கேட்கப்பட்டதை உறுதி செய்துள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த விவகாரம் தொடா்பாக நாட்டின் பல பகுதிகளில் சிபிஐ சோதனை நடத்தியது. மேலும் முக்கிய ஆவணங்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் சிபிஐ கைப்பற்றியுள்ளது. அதைத் தடவியல் துறை மற்றும் தொழில்நுட்ப நிபுணா்கள் பரிசோதித்து வருகின்றனா்.

புணேயில் பயிற்சி மையத்தில் பேராசிரியருக்கு உதவிய மனீஷா மூலம் முதலில் தனஞ்ஜய் என்பவா் வினாத்தாளைப் பெற்றுள்ளாா். பிறகு அதை நாசிக்கை சோ்ந்த சுபம் கெய்நாருக்கு அளித்துள்ளாா். அவா் மூலம், ஜெய்பூா் உள்ளிட்ட பல இடங்களைச் சோ்ந்தோருக்கு வினாத்தாள் பரவியுள்ளது. இதற்கு கைம்மாறாக பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனா் என்று தெரிவித்தாா்.