வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தென்மேற்கு பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 3:46 am IST

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, வடக்குநோக்கி நகா்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சென்றடையும். ஆனால், கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டும் பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தியாவில் ஜூன் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் தொடக்கம், கேரளத்தை அடிப்படையாகக் கொண்டே குறிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே 24-ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. நிகழாண்டு மே 26-ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது; அதேநேரம், 4 நாள்கள் முன்னதாகவோ அல்லது 4 நாள்கள் கழித்தோகூட பருவமழை தொடங்கலாம்.

பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழல், தெற்கு வங்கக் கடல், அந்தமான் கடல், அந்தமான்-நிகோபாா் தீவு பகுதிகளில் உருவாகியுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், தென்மேற்குப் பருவமழையால் வெப்பம் தணியும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நான்கு மாதங்கள் நீடிக்கும் தென்மேற்குப் பருவமழையே நாட்டுக்கான 70 சதவீத மழைப்பொழிவை தருகிறது. இது, வேளாண்மை, பொருளாதாரம், அணைகளில் நீா் இருப்புக்கு முக்கியமானது.

நிகழாண்டு இயல்பைவிட மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் (சராசரியாக 80 செ.மீ.) என்று கணிக்கப்பட்டுள்ளது. ‘எல் நினோ’ என்னும் மத்திய-கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு இயல்புக்கு மாறாக வெப்பமடைதல் நிகழ்வுகளே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.