தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

உ.பி. மத நிகழ்வில் பிரசாதம் உண்ட 60 பேருக்குப் பாதிப்பு!

மத நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட பிரசாதம் பற்றி..

News image

பக்தர்களுக்கு பிரசாதம் - படம்: டிஎன்எஸ்

Updated On :49 நிமிடங்கள் முன்பு

உத்தரப் பிரதேசத்தில், தனியார் இல்லத்தில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சியின்போது பிரசாதம் சாப்பிட்ட 62 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னோஜ் மாவட்டத்தின் சிமுவாபூர் கிராமத்தில் அமைந்துள்ள முன்னா லால் காஷ்யப் என்பவரின் இல்லத்தில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சத்யநாராயண பூஜை நிகழ்ச்சியின் போது, ​​பஞ்சாமிர்தம் என்ற பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

நேற்றிரவு பிரசாதத்தைச் சாப்பிட்ட பிறகு, பலரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அனைவரும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆகாங்ஷா கூறுகையில்,

நேற்றிரவு 10.30 மணியளவில் 62 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்த 14 பேர் திர்வா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

மீதமுள்ளவர்களுக்கு நரம்புவழிச் செலுத்தும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலானவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் அசுதோஷ் மோகன் அக்னிஹோத்ரி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுவதேஷ் குப்தா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஜய் குமார் ஆகியோர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்ததுடன், அவர்களுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை அளிக்கத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

உணவில் கலப்படம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Summary

Sixty-two people fell sick allegedly after earing 'prasad' during a religious ceremony being held here at a private residence, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.