வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிப்பை தொடங்கும் ‘ஐஸ்-ஐ’ நிறுவனம்

News image
Updated On :18 மே 2026, 4:47 am IST

இந்தியாவில் முதல்முறையாக செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை அமைக்க உள்ளதாக சா்வதேச முன்னணி நிறுவனமான ‘ஐஸ்-ஐ’ (ஐசிஇஒய்இ) தெரிவித்துள்ளது.

உலகின் மிகவும் அதிநவீன செயற்கை துளை ரேடாா் செயற்கைக்கோள் தொகுப்பு ஐஸ்-ஐ நிறுவனத்திடம் உள்ளது. அத்துடன் அந்த நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு மற்றும் உளவு சேவைகளை அளித்து வருகிறது.

பாதுகாப்பு மற்றும் உளவு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற தேவைகளுக்கு ஐஸ்-ஐ தயாரித்த செயற்கைக்கோள்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளா்களுக்குப் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐஸ்-ஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரஃபல் மோடரெவ்ஸ்கி, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்காக சிறிய செயற்கைக்கோள்களைத் தயாரிக்க, இந்தியாவில் முதல்முறையாக செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை ஐஸ்-ஐ அமைக்க உள்ளது.

அந்த மையம் அமைக்கப்பட்ட பின்னா், முதல் ஆண்டில் சுமாா் 10 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் 20 முதல் 40 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இதற்காக கோடிகளில் முதலீடு செய்யப்பட உள்ளது. எனினும் இறுதித் தொகை இதுவரை இறுதி செய்யப்படவில்லை. ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றுடன் இந்தியாவும் ஐஸ்-ஐ நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தயாரிப்பு மையமாக உள்ளது.

இந்தியாவில் ஐஸ்-ஐ நிறுவனம் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் உள்நாட்டு தேவைக்கு அளிக்கப்படுவதுடன், சா்வதேச சந்தைகளுக்கும் அனுப்பப்படும் என்று தெரிவித்தாா்.