வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலி!

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலியானது பற்றி...

News image

நவ்யா கடுசு - EPS

Updated On :18 மே 2026, 12:41 pm IST

சிகாகோவில் படித்துவந்த இந்திய மாணவி சாலை விபத்தில் சிக்கி சனிக்கிழமை பலியானார்.

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நவ்யா கடுசு (வயது 25), சிகாகோவில் தங்கிப் படித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

இவருடன் பயணித்த 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்தது எப்படி?

இண்டியானா மாகாணம், லேக் கவுண்டியில் உள்ள கிரவுன் பாயிண்ட் அருகே நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு 11.15 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்ததாவது:

”இயந்திரக் கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த வாகனம் மீது நவ்யா உள்ளிட்டோர் சென்ற மினி வேன் மோதியுள்ளது. இதில், நிலை தடுமாறிய மினி வேன் சாலையோர வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மினி வேனின் முன்புறம் மட்டுமே இரண்டு இருக்கைகள் இருந்ததாகவும், பின்புறம் மாம்பழப் பெட்டிகள் மேல் 5 பேர் அமர்ந்து, சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நவ்யா, சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ்யாவின் மரணத்துக்கு சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், அவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Summary

Indian Student Killed in Chicago Road Accident!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.