ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தில் இடியுடன் பலத்த மழை: இந்திய வானிலை ஆய்வு மையம்

News image

PTI

Updated On :4 நிமிடங்கள் முன்பு

அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

அதேவேளையில், அந்த மாநிலத்தில் வரும் மே 26-ஆம் தேதிக்கு 4 நாள்களுக்கு முன்போ அல்லது 4 நாள்களுக்குப் பிறகோ தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கன்னியாகுமரியின் சில பகுதிகளையும், தென்கிழக்கு அரபிக் கடலின் பெரும்பாலான பகுதிகளையும் தென்மேற்கு பருவமழை எட்டியுள்ளது. மத்திய கிழக்கு, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடலின் பெரும்பகுதி, அந்தமான்-நிகோபாா் தீவுகளையும் தென்மேற்குப் பருவமழை எட்டியுள்ளது. அதேவேளையில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.