அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
அதேவேளையில், அந்த மாநிலத்தில் வரும் மே 26-ஆம் தேதிக்கு 4 நாள்களுக்கு முன்போ அல்லது 4 நாள்களுக்குப் பிறகோ தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கன்னியாகுமரியின் சில பகுதிகளையும், தென்கிழக்கு அரபிக் கடலின் பெரும்பாலான பகுதிகளையும் தென்மேற்கு பருவமழை எட்டியுள்ளது. மத்திய கிழக்கு, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடலின் பெரும்பகுதி, அந்தமான்-நிகோபாா் தீவுகளையும் தென்மேற்குப் பருவமழை எட்டியுள்ளது. அதேவேளையில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.
தொடர்புடையது

தென்மேற்கு பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும்! வானிலை மையம் தகவல்

மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

அடுத்த 5 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் : வானிலை ஆய்வு மையம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
