தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஆந்திரத்தில் ரூ. 2,500 கோடியில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கும் ராயல் என்ஃபீல்ட்!

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

News image

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - X

Updated On :19 மே 2026, 1:00 pm IST

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமே உற்பத்தி ஆலையை வைத்திருந்த பிரபல இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் தற்போது ஆந்திரத்தில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கவுள்ளது.

அதிகரித்து வரும் தேவை காரணமாக இந்த புதிய உற்பத்தி ஆலை தொடங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி அருகேயுள்ள தடா பகுதியில் இந்த ஆலை அமைக்கப்படவுள்ளது. இதற்கென ரூ. 2,500 கோடி முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிறுவன இயக்குரின் ஒப்புதலுக்குப் பின் ஒவ்வொரு கட்டமாக இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

தமிழகத்தை விட்டு முதல் முறையாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை வெளி மாநிலத்தில் அமைக்கின்றது. இரு சக்கர வாகனச் சந்தையின் தேவைக்கேற்ப எதிர்கால வியாபாரத்தைக் கணக்கில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 14.6 லட்சம் யூனிட்கள் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இது அதன் முழு உற்பத்தி திறனை நெருங்கியுள்ளது.

தமிழகத்தின் செய்யாறு பகுதியில் ரூ. 958 கோடி செலவில் புதிய ஆலையைத் தொடங்குவதாக இந்தாண்டு பிப்ரவரி மாதம் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த ஆலையின் மூலம் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 20 லட்சமாக உயருமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழகத்தில் உள்ள 4 உற்பத்தி ஆலைகளைத் தவிர்த்து வங்கதேசம், நேபாளம், பிரேசில், தாய்லாந்து, அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் பாகங்களை ஒன்றிணைக்கும் (அசெம்ப்ளி) ஆலைகளை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அமைத்துள்ளது.

உலகம் முழுவதும் 3,200 விற்பனையகங்கள் மூலம் 80 நாடுகளில் விற்பனை மேற்கொள்ளும் ராயல் என்ஃபீல்ட் நிறுவன வாகனங்களுக்குத் சந்தையில் தேவை மேலும் அதிகரித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து, புதிய உற்பத்தி ஆலை ஆந்திரத்தில் தொடங்கப்படவுள்ளது.

இதுபற்றி தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ஆலையில் ஆண்டுக்கு 9,000 பைக்குகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இதன் மூலம் 15,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Royal Enfield to set up a new manufacturing plant in Andhra Pradesh at a cost of ₹2,500 crore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.