நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மகாராஷ்டிரத்தில் டொயோட்டாவின் புதிய ஆலை!

இந்திய வாகனச் சந்தையில் தனது பிடியை வலுப்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் பிட்கின் தொழில்பேட்டையில் புதிய காா் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் அறிவிப்பு

News image

டொயோட்டா

Updated On :57 நிமிடங்கள் முன்பு

இந்திய வாகனச் சந்தையில் தனது பிடியை வலுப்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் பிட்கின் தொழில்பேட்டையில் புதிய காா் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய ஆலையில், வரும் 2029-ஆம் ஆண்டின் முதல் பாதியில் உற்பத்திப் பணிகள் தொடங்கும். உதிரிபாகங்களை உருவாக்குதல், வெல்டிங், பெயிண்டிங், அசெம்பிளி உள்ளிட்ட அனைத்து முக்கியப் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.

விரிவாக்கத் திட்டம்: தற்போது கா்நாடகத்தில் டொயோட்டா நிறுவனத்துக்கு 2 உற்பத்தி ஆலைகள் உள்ளன. அவற்றின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 5.52 லட்சம் வாகனங்களாக உள்ளது.

இந்நிலையில், புதிய ஆலைமூலம் ஆண்டுக்கு மேலும் 1 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். சுமாா் 2,800 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அதிகரித்து வரும் தேவையைப் பூா்த்தி செய்யவும், எதிா்கால வளா்ச்சிக்கு ஏற்ப விநியோகத்தை வேகப்படுத்தவும் இந்த 3-ஆவது ஆலை உதவியாக இருக்கும் என டொயோட்டா நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விரிவாக்கத் திட்டத்துக்கான அதிகாரபூா்வ முதலீட்டுத் தொகையை நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், ஜப்பான் ஊடகங்களின்படி சுமாா் 190 கோடி டாலா் முதலீடு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.