செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

10 நிமிடம் சார்ஜ் செய்தால் 300 கி.மீ. பயணம்! 1 மணி நேரத்தில் 3,100 மின்சார கார்கள் முன்பதிவு!

டொயோட்டா நிறுவனம் புதிய காரை அறிமுகம் செய்த ஒரு மணிநேரத்தில் 3,100 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.

News image

பிஇஸட்7 - படம் / நன்றி - டொயோட்டா

Updated On :31 மார்ச் 2026, 6:08 pm IST

டொயோட்டா நிறுவனம் தனது புதிய காரை அறிமுகம் செய்த ஒரு மணிநேரத்தில் 3,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.

ஜிஏசி குழுவுடன் இணைந்து பிஇஸட்7 (bZ7) என்ற புதிய மின்சார காரை டொயோட்டா நிறுவனம் தயாரித்துள்ளது. சீனாவில் கடந்த வாரம் இந்த கார் அறிமுகமானது. இதன் அறிமுக விலை 1,99,800 யுவான் (ரூ. 27.21 லட்சம்).

இந்தக் கார் கடந்த வார இறுதியை இலக்கு வைத்து வெளியிடப்பட்ட நிலையில், அதிக தரப்பிலான மக்களால் கவரப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்தில் 3,100 முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக ஜிஏசி - டொயோட்டா துணைத் தலைவர் பென் பெளலின் தெரிவித்துள்ளார்.

மின்சார கார்கள் பிரிவில் உலகளவில் டொயோட்டா நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்துள்ள தயாரிப்புகளை விட மேம்பட்டதாக பிஇஸட்7 உள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

'ஹியூமன் - கார் - ஹோம்' என்ற ஸ்மார்ட் டிரைவிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காரில் இருந்தவாறே வீட்டில் உள்ள நவீன மின்சாரப் பொருள்களைக் கட்டுப்படுத்த முடியும். ஷாவ்மி நிறுவனத்துடன் இணைந்து இதனை டொயோட்டா செய்துள்ளது.

நேவிகேஷன், ஆட்டோபைலட் போன்ற 50 வகையிலான பாதுகாப்பு மற்றும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கார் இருக்கைகளில் அமர்ந்திருக்கும்போது புவிஈர்ப்பு விசையால் உருவாகும் வெப்பத்தைக் கூட உணர முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக வெப்பமோ, குளிரோ காருக்குள் இருக்காது. காரினுள்ளேயே குளிரூட்டியுடன் குளிர்பதன வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.

15.6 அங்குல தகவல் பலகை, ஓட்டுநருக்காக 8.8 திரை உள்ளது. இரட்டை சேம்பர் சஸ்பென்ஷன் உள்ளதால், காரில் எந்தவித அதிர்வுகளும் இல்லாமல் பயணிக்க முடியும்.

டெஸ்லா மாடலை முன்மாதிரியாகக் கொண்டு காரின் நீளம், உயரம் மற்றும் அகலம் நிர்ணயிக்கப்படுள்ளது. 513 செ.மீ. நீளம், 196.5 செ.மீ. அகலம், 150 செ.மீ. உயரம் கொண்டது.

71 kWh மற்றும் 88 kWh என்ற இரு வகையிலான பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 600 கி.மீ. முதல் 700 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

3சி வேகமாக சார்ஜ் ஆகும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதால், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 300 கி.மீ. வரை செல்ல முடியும் என டொயோட்டா கூறுகிறது.

காரின் பேட்டரிக்கு 2 ஆண்டுகள் வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது அல்லது 50,000 கி.மீ. வரை வாரண்டியை பெற்றுக்கொள்ளலாம். இதற்குள் பேட்டரியை மாற்றம் செய்ய வேண்டுமென்றால், இலவசமாக செய்து தரப்படும் என டொயோட்டா குறிப்பிட்டுள்ளது.

Summary

Toyota’s new luxury EV in China receives over 3,000 orders in 1 hour

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.