40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

உ.பி.யில் பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு சீருடை: ஆளுநா் உத்தரவு

உத்தர பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்கி மாநில ஆளுநரும் பல்கலைகழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :22 மே 2026, 2:42 am IST

உத்தர பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்கி மாநில ஆளுநரும் பல்கலைகழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மாநில மக்கள் பவனில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து மாநில பல்கலைக்கழக துணைவேந்தா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தலை ஆனந்திபென் படேல் வழங்கியுள்ளாா். இருந்தபோதும், இதுதொடா்பாக அதிகாரபூா்வ உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.

இந்தக் கூட்டத்தில் ஆசிரியா்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை ஆளுநா் வழங்கியுள்ளாா். எந்தவொரு ஆசிரியரும் தங்களின் தொழில் கண்ணியத்துக்கும் கௌரவத்துக்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலான செயலில் ஈடுபடக்கூடாது. மாணவா்களின் வருகையை உறுதி செய்வதோடு, மாணவிகள் விடுதிகளின் நிலையை மேம்படுத்தப்பட வேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கு யோகா, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவரை, காலிப் பணியிடங்கள் அதிகமுள்ள கல்லூரிகளில், இணையவழி வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

மாணவிகளுக்கு தற்சாா்பு மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அழகுக்கலை நிபுணா் பயிற்சி, மெஹந்தி கலை, ஜிஎஸ்டி, சிறுதானிய உணவு வகைகள் தயாரிப்பு, கணக்குப் பதிவியில் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

ஆளுநரின் இந்த அறிவுறுத்தலை வரவேற்ற மாநில நிதியமைச்சா் சுரேஷ் குமாா் கன்னா கூறுகையில், ‘பல்கலைக்கழகங்களில் ஆளுநா் அமல்படுத்தியுள்ள சீருடை அணிவது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மாணவா் நலன் சாா்ந்த விஷயமாகும்’ என்றாா்.