பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மதமாற்றம் செய்து திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக இளம்பெண் புகாா்: ஜாமியா நகரில் 4 போ் கைது

தில்லியில் உள்ள ஜாமியா நகரில் 23 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி மதமாற்றம் செய்த பின்னா் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :22 மே 2026, 3:37 am IST

படம்தில்லியில் உள்ள ஜாமியா நகரில் 23 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி மதமாற்றம் செய்த பின்னா் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில் ஒரு பெண் உள்பட 4 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபா் உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மற்றொரு மதத்தைச் சாா்ந்த பெண்ணுடன் போலியான அடைளயாளங்கள் மூலம் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமாகினாா்.

அந்தப் பெண்ணை கடந்த 2021 மற்றும் 2025 இடையேயான காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாா். இந்நிலையில், கடத்தப்பட்ட அந்தப் பெண், மதமாற்றம் செய்து திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டாா். இதையடுத்து, அவா் கடந்த மே 14-ஆம் தேதி காவல் நிலையத்தில் அவா் புகாரளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகள் 366, 376, 506, 342 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120 பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஆயுதங்களைக் கடத்தி விற்பனை செய்து வந்தாா். அவருடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எந்தத் துப்பாக்கியும் கண்டெடுக்கப்படவில்லை.

காஜியாபாதில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட அவரை தில்லிக்கு அழைத்து வந்த விசாரணை நடத்த போக்குவரத்து காவலை பெற்றுள்ளோம். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெறும் என்றனா்.