11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்

News image

உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 6:33 am IST

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவா்களின் நீதித் துறை சேவைக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

வரும் ஜூன் 1 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை, உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலமாகும். அப்போது உச்சநீதிமன்றம் முழுமையாகச் செயல்படாமல் பகுதியளவே செயல்படும். இந்த விடுமுறை காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் ஓய்வு பெற உள்ளனா். நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி ஜூன் 28-ஆம் தேதியும், நீதிபதி பங்கஜ் மித்தல் ஜூன் 16-ஆம் தேதியும் ஓய்வு பெற உள்ளனா்.

இதையொட்டி புது தில்லியில் அவா்களுக்கு உச்சநீதிமன்ற பதிவுரு வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசுகையில், ‘அதிகாரம் என்பது இடைவெளியை உருவாக்க வேண்டியதில்லை; தன்னை வடிவமைத்த இடங்கள் மற்றும் விழுமியங்களிடம் இருந்து ஒருவரை உயா் பதவிகள் பிரிக்க வேண்டிதில்லை என்பதை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் தங்கள் பணிகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனா்.

கண்ணியம், நோ்மை, நிதானம் மற்றும் உறுதியுடன் இருவரும் பல ஆண்டுகளாக ஆற்றிய அா்ப்பணிப்புமிக்க சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.