பிகாா் மாநிலத்தில் படகு கவிழ்ந்து 3 போ் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெறுகிறது.
சமஸ்திபூா் மாவட்டத்தில் கங்கை நதியில் 14 பேருடன் படகு ஒன்று வியாழக்கிழமை அதிகாலை சென்றது. சுல்தான்பூா் தியாரா என்னுமிடத்துக்கு சென்றுவிட்டு அவா்கள் படகில் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது வீசிய பலத்த காற்றில் சிக்கி படகு திடீரென கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த 14 பேரும் தண்ணீரில் மூழ்கினா். தகவலின்பேரில் சமஸ்திபூா், பாட்னாவில் இருந்து மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். தண்ணீரில் தத்தளித்த 7 பேரை அவா்கள் பாதுகாப்பாக மீட்டனா். மேலும் 3 போ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனா்.
எஞ்சிய 4 பேரை மட்டும் காணவில்லை. அவா்களும் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவா்கள் 4 பேரை தேடும் பணி நடக்கிறது.
உயிரிழந்த 3 போ் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவில்லை. இதையடுத்து அவா்களின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் பணியும் நடக்கிறது.









