முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கோடியக்கரை: நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் மீட்பு; ஒருவர் மாயம்!

கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயமடைந்த சம்பவம் தொடர்பாக...

News image

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர்கள். - படம்: தினமணி

Updated On :26 மே 2026, 12:00 pm IST

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலுக்குள் சென்ற நான்கு மீன்வர்கள் கரை திரும்பாததால், தேடப்பட்டு வந்தவர்களில் 3 பேர் மீட்கப்பட்டனர். மாயமான ஒருவர், தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.

கோடியக்கரை படகுத் துறையிலிருந்து பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப்படகு ஒன்றில் அன்புச்செல்வன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர்.

திங்கள்கிழமை கரைக்கு திரும்பியிருக்க வேண்டிய இந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை காலை வரையில் கரைக்கு திரும்பவில்லை.

இதையடுத்து, சக மீனவர்கள் இரண்டு படகுகளில் சென்று, தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், வேகமாக வீசி வந்த காற்றில் படகு கவிழ்ந்து, அதில் மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். தேடிச் சென்ற மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்த, குமார் உள்ளிட்ட மூன்று மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், அவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடைய, படகில் இருந்து மாயமான அன்புச்செல்வனை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Summary

Three of the four fishermen who ventured into the sea from the Kodiakkarai fishing harbor near Vedaranyam in Nagapattinam district and failed to return to shore have been rescued. The one missing fisherman continues to be sought.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.