கரப்பான்பூச்சி மக்கள் கட்சி குறித்த கேள்விக்கு, ஜனநாயகத்தில் அனைத்து குரல்களுக்கும் இடமுண்டு என்று ஆர்எஸ்எஸ் தலைவர் சுனில் அம்பேகர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர்.
தொடங்கிய சில நாள்களிலேயே, அதன் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. இதனையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.
முடக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் புதியதொரு எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்டது.
இது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்ததாவது:
ஒரு ஜனநாயகத்தில் நடைபெறும் எந்தவொரு விவாதத்தையோ அல்லது மக்கள் வெளிப்படுத்தும் பல்வேறு கருத்துக்களையோ ஒரு அதிர்ச்சியாகக் கருதக்கூடாது என்று நான் உணர்கிறேன். அவை இயல்பானவையாகக் கருதப்பட வேண்டும். அவற்றைக் கையாளும் அளவுக்கு ஊடகங்களுக்குப் போதுமான சுதந்திரம் இருப்பதாக நான் நம்புகிறேன்.
நமது மக்கள் சக்தியும், ஜனநாயகமும் வலிமையானவை. ஒவ்வொருவரின் குரலையும் உணர்வையும் உள்ளடக்கும் ஆற்றல் ஜனநாயகத்துக்கு உண்டு.
ஒரு ஜனநாயகத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. மேலும் அவற்றைக் கையாள்வதற்கான அனைத்து வழிகளும் நாட்டில் உள்ளன எனத் தெரிவித்தார்.
Summary
Responding to a question regarding the 'Cockroach Janata Party,' RSS leader Sunil Ambekar stated on Saturday that there is room for all voices in a democracy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘வந்தே மாதரம்’ ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி நிரல்! பினராயி விஜயன்
விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக முழு ஆதரவு: அன்புமணி ராமதாஸ்

பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்







