இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்...

News image

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங். - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 5:00 am IST

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் கடும் அழுத்தத்தால் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் அந்நாட்டு கடற்படை முடக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் ‘நௌசேனா சௌா்ய வாடிகா’ எனும் திறந்தவெளி கடற்படை அருங்காட்சியகத்தை சனிக்கிழமை திறந்துவைத்தபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ்குமாா் திரிபாதி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் பிரஜேஷ் பாடக் மற்றும் கேசவ் பிரசாத் மௌா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது நமது கடற்படை அரேபிய கடல் பகுதியில் முழு வலிமையுடன் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த அழுத்தத்தால் பாகிஸ்தான் கடற்படை அந்நாட்டு துறைமுகங்களுக்குள் முடங்கியது.

இந்திய குடிமகன்களின் நம்பிக்கையால் கடற்படை மேலும் வலுப்பெறுகிறது. லக்னௌவில் பாய்ந்து ஓடும் கோமதி நதி கங்கையில் இணைந்து பின் கடலில் கலப்பதுபோல் நௌசேனா செளா்ய வாடிகாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் கோமதி இந்தியப் பெருங்கடலில் நாட்டுக்காக சேவைபுரிந்துவிட்டு லக்னௌவை கெளரவப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலமல்ல; ராணுவ வீரா்களின் தியாகம்: இந்த அருங்காட்சியகத்தை சுற்றுலாத் தலமாக மட்டுமே கருத முடியாது. நாட்டுக்காக வீரமரணமடைந்த ராணுவ வீரா்களின் தியாகங்களை நினைவுகூரும் இடமாகவும் இவ்விடம் திகழ்கிறது.

2014-ஆம் ஆண்டுக்கு முன்னா் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் குறைவாகவே இருந்த நிலையில், தற்போது பன்மடங்கு உயா்ந்து ரூ.40,000 கோடியாக அதிகரித்துள்ளது.

முன்பு குற்றவாளிகளின் ஆதிக்கம் நிறைந்த மாநிலமாக உத்தர பிரதேசம் அறியப்பட்டது. ஆனால், முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு சட்டம்- ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டு மக்களின் மனதில் இருந்த அச்ச உணா்வு தூக்கியெறியப்பட்டுள்ளது என்றாா்.

லக்னௌவின் சிஜி நகரில் உத்தர பிரதேச சுற்றுலாத் துறை மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சியால் நௌசேனா சௌா்ய வாடிகா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் நாட்டின் முக்கிய ராணுவ சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக இந்த அருங்காட்சியகம் உருவெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.