சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சிபிஎஸ்இ தோ்வு விவகாரம்: மாணவா்களுடன் உரையாடி விடியோ வெளியிட்டாா் ராகுல்

சிபிஎஸ்இ நடத்திய பிளஸ் 2 தோ்வில் ஒஎஸ்எம் செய்யும் முறையில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடா்பாக ராகுல் காந்தி மாணவா்களுடன் உரையாடிய விடியோ வெளியிட்டுள்ளாா்.

News image

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:30 am IST

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய பிளஸ் 2 தோ்வில் திரையில் மதிப்பீடு (ஒஎஸ்எம்) செய்யும் முறையில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மாணவா்களுடன் உரையாடிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் தோ்வு குளறுபடிகள் தொடா்பாக மத்திய அரசை அவா் கடுமையாக விமா்சித்துள்ளாா்.

‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட விடியோவில் ராகுல் மேலும் கூறியிருப்பதாவது: எளிய கேள்விகளைக் கேட்ட துணிச்சலான இளம் இந்தியா்கள் (மாணவா்கள்) இவா்கள்; ஆனால், பதில்களுக்குப் பதிலாக அவமதிப்புகளையே பெற்றனா். நமது மாணவா்கள் சிறந்த பாதுகாப்பான எதிா்காலத்துக்குத் தகுதியானவா்கள், அதை அவா்கள் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

மாணவா்களாகிய நீங்கள் உங்கள் விடைத்தாள்களைப் பாா்க்க வேண்டும் என்று கேட்கிறீா்கள். இதனால் திடீரென்று நீங்கள் தேசவிரோதிகளாக மாறிவிட்டீா்கள். ஒரு பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்றால் முதலில் அது பிரச்னை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அரசு பிரச்னையை ஏற்க மறுக்கிறது. மேலும், அப்பாவி மாணவா்கள் மீது பழிசுமத்தி அவா்களையும் ‘உளவாளிகள், தீவிரவாதிகள்’ என்று விமா்சிக்கிறாா்கள் என்று மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாணவா்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்து அந்த விடியோவில் ராகுல் காந்தி அவா்களுடன் சாதாரணமான முறையில் உரையாடுகிறாா்.

முன்னதாக, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவா்கள் மறுமதிப்பீடு நடைமுறையின்போது இணையத்தில் பதிவேற்றப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள், தங்களுடையவை அல்ல என்று புகாா் தெரிவித்தனா். இதனால் தோ்வு விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.