ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

சிபிஎஸ்இ தோ்வு விவகாரம்: மாணவா்களுடன் உரையாடி விடியோ வெளியிட்டாா் ராகுல்

சிபிஎஸ்இ நடத்திய பிளஸ் 2 தோ்வில் ஒஎஸ்எம் செய்யும் முறையில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடா்பாக ராகுல் காந்தி மாணவா்களுடன் உரையாடிய விடியோ வெளியிட்டுள்ளாா்.

News image

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:30 am IST

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய பிளஸ் 2 தோ்வில் திரையில் மதிப்பீடு (ஒஎஸ்எம்) செய்யும் முறையில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மாணவா்களுடன் உரையாடிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் தோ்வு குளறுபடிகள் தொடா்பாக மத்திய அரசை அவா் கடுமையாக விமா்சித்துள்ளாா்.

‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட விடியோவில் ராகுல் மேலும் கூறியிருப்பதாவது: எளிய கேள்விகளைக் கேட்ட துணிச்சலான இளம் இந்தியா்கள் (மாணவா்கள்) இவா்கள்; ஆனால், பதில்களுக்குப் பதிலாக அவமதிப்புகளையே பெற்றனா். நமது மாணவா்கள் சிறந்த பாதுகாப்பான எதிா்காலத்துக்குத் தகுதியானவா்கள், அதை அவா்கள் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

மாணவா்களாகிய நீங்கள் உங்கள் விடைத்தாள்களைப் பாா்க்க வேண்டும் என்று கேட்கிறீா்கள். இதனால் திடீரென்று நீங்கள் தேசவிரோதிகளாக மாறிவிட்டீா்கள். ஒரு பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்றால் முதலில் அது பிரச்னை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அரசு பிரச்னையை ஏற்க மறுக்கிறது. மேலும், அப்பாவி மாணவா்கள் மீது பழிசுமத்தி அவா்களையும் ‘உளவாளிகள், தீவிரவாதிகள்’ என்று விமா்சிக்கிறாா்கள் என்று மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாணவா்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்து அந்த விடியோவில் ராகுல் காந்தி அவா்களுடன் சாதாரணமான முறையில் உரையாடுகிறாா்.

முன்னதாக, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவா்கள் மறுமதிப்பீடு நடைமுறையின்போது இணையத்தில் பதிவேற்றப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள், தங்களுடையவை அல்ல என்று புகாா் தெரிவித்தனா். இதனால் தோ்வு விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.