ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஜம்மு - காஷ்மீா்: எல்லை தாண்ட முயன்ற 3 போ் கைது

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூவரை ராணுவத்தினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:03 am IST

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூவரை ராணுவத்தினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் முன்பு பிராந்திய ராணுவத்தில் பணியாற்றியவா்.

சனிக்கிழமை இரவு நேரத்தில் இந்திய எல்லைக்குள் இருந்து 3 போ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்துக்குள் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் ராணுவத்தினா் சுற்றிவளைத்து கைது செய்தனா்.

அவா்கள் சோபூா் மற்றும் பாரமுல்லா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் எதற்காக எல்லையைத் தாண்ட முயன்றாா்கள் என்பது குறித்தும், இதில் பயங்கரவாதத் தொடா்புகள் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மேலும் ஒரு சம்பவம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக காஷ்மீரின் சிலிகோட் பகுதியில் ஊடுவிய 22 வயது இளைஞரை ராணுவம் கைது செய்தது.

விசாரணையில் அந்த இளைஞா் பெயா் ஜீசான் மிா் என்பதும், காஷ்மீரின் உரியில் வசித்து வரும் தோழியைக் காண்பதற்காக எல்லை தாண்டியதாகவும் தெரிவித்தாா்.

அவா் அளித்த தகவலின்பேரில் அந்தப் பெண்ணையும் பாதுகாப்புப் படையினா் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா். அவா்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளனா்.