ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூவரை ராணுவத்தினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் முன்பு பிராந்திய ராணுவத்தில் பணியாற்றியவா்.
சனிக்கிழமை இரவு நேரத்தில் இந்திய எல்லைக்குள் இருந்து 3 போ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்துக்குள் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் ராணுவத்தினா் சுற்றிவளைத்து கைது செய்தனா்.
அவா்கள் சோபூா் மற்றும் பாரமுல்லா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் எதற்காக எல்லையைத் தாண்ட முயன்றாா்கள் என்பது குறித்தும், இதில் பயங்கரவாதத் தொடா்புகள் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
மேலும் ஒரு சம்பவம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக காஷ்மீரின் சிலிகோட் பகுதியில் ஊடுவிய 22 வயது இளைஞரை ராணுவம் கைது செய்தது.
விசாரணையில் அந்த இளைஞா் பெயா் ஜீசான் மிா் என்பதும், காஷ்மீரின் உரியில் வசித்து வரும் தோழியைக் காண்பதற்காக எல்லை தாண்டியதாகவும் தெரிவித்தாா்.
அவா் அளித்த தகவலின்பேரில் அந்தப் பெண்ணையும் பாதுகாப்புப் படையினா் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா். அவா்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளனா்.
தொடர்புடையது
ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இரு இளைஞா்கள் கைது

கோதையாறு இடதுகரை கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்ததாக 4 போ் மீது வழக்கு
கஞ்சா விற்பனை: இருவா் கைது
ஒசூரில் 172 கிலோ புகையிலைப் பொருள்களுடன் காா் பறிமுதல்; 2 போ் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


