FOLLOW US

ON GOOGLE DISCOVER

கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

பள்ளிப் பேருந்தில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கை!

பள்ளிப் பேருந்தில் தங்களது சிறு குழந்தைகள் அல்லது பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கையாக வந்திருக்கும் செய்தி..

 உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை தனியாா் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்த வருவாய்க் கோட்டாட்சியா் தாட்சாயணி.

பள்ளிப் பேருந்து - dps

Published On :4 செப்டம்பர் 2026, 12:34 pm IST

நவி மும்பையில் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை, பேருந்து ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கமோதி என்ற பகுதியில், குற்றத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைதான், பள்ளிப் பேருந்தில் கடைசியாக இறங்கும் குழந்தை என்பதால், அனைத்துப் பிள்ளைகளும் இறங்கியதும், பேருந்திலேயே குழந்தையை, பேருந்து ஓட்டுநர் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வீட்டுக்கு வந்ததும் குழந்தை வயிறு வலிப்பதாக பாட்டியிடம் கூற, என்ன நடந்தது என்று பாட்டி கேட்டிருக்கிறார். அதற்கு குழந்தை, பேருந்து ஓட்டுநர் தன்னை துன்புறுத்தியது குறித்து கூறியதும், உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் பேசி, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, குழந்தைக்கு மருத்துவ சோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிப் பேருந்தில் பாதுகாப்பாக அனுப்புகிறோம் என நினைக்கும் பெற்றோர், இனி பள்ளிப் பேருந்து எங்கிருந்து கிளம்புகிறது, நம் குழந்தை ஏறும்போது பேருந்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், இறங்கும்போது யாராவது இருக்கிறார்களா? பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மூலமாக குழந்தைக்கு பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுமா என்பதுபற்றியும் யோசிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.