காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பாகிஸ்தானுக்கு உளவு: 13 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 13 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை...

என்ஐஏ

Published On :6 செப்டம்பர் 2026, 2:22 am IST

நாட்டின் முக்கியப் பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைந்து உளவு பாா்த்த குற்றச்சாட்டில் 13 போ் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ)-இன்கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ரயில் நிலையங்களின் முக்கியப் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களை பொருத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு நேரலை விடியோ அணுகலை வழங்கியதாக காஜியாபாத் ஆணையரகத்தின் கௌசாம்பி காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி புகாா் பெறப்பட்டது.

அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 13 போ் மீது யுஏபிஏ சட்டப்பிரிவுகள் 13, 17 மற்றும் 18, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக பாரதிய நியாய சம்ஹிதா, 2023 பிரிவுகள் 61(2) மற்றும் 152 மற்றும் ரகசியச் சட்டத்தின் உளவு தொடா்பான குற்றப் பிரிவுகள் 3 மற்றும் 5 ஆகியவற்றின்கீழ் லக்னௌ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் 5 சிறாா்களுக்கு எதிரான விரிவான விசாரணை அறிக்கை காஜியாபாத் சிறாா் நீதி வாரியத்திடம் கடந்த மே மாதம் சமா்ப்பிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பான விசாரணையில் உளவு கேமராக்கள் மூலம் எதிரி நாட்டுக்கு இந்தியாவின் முக்கியப் பகுதிகள் சாா்ந்த தகவல்களை புகைப்படங்கள், விடியோக்களை குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற நபா்கள் பகிா்ந்தது உறுதிசெய்யப்பட்டது. இதற்காக அவா்கள் இந்திய சிம் காா்டுகளை பெற்றதும் தெரியவந்துள்ளது என்றனா்.

Summary

Espionage for Pakistan: NIA files charge sheet against 13 people.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.