எம்.எஸ்.வி.யின் முத்தம்..!

கண்ணே கலைமானே பாடலை மேடையில் இசைத்தபோது இளைஞராஜாவுக்கு எம்எஸ்வி என்ன கொடுத்தார் தெரியுமா..?

எம்.எஸ்.வி.யின் முத்தம்

எம்.எஸ்.வி. சார் எப்போதும் என்னுள் இருக்கிறார். இது, மெல்ல திறந்தது கதவு பட கம்போஸிங் நேரம். அவர் இந்த மாதிரி முத்தம் கொடுத்தது இரண்டு, மூன்று சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது. பாராட்டினால் முத்தம் கொடுத்து வாழ்த்துவார். அது ரொம்பவே சிலிர்ப்பாக இருக்கும். சேலத்தில் ஓர் இசை நிகழ்ச்சி. கவிஞர் கண்ணதாசனுக்கு சிலை வைப்பதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி அது.

கே.வி. மகாதேவன் சார், எம்.எஸ்.வி. சார், நான் என மூன்று பேரும் அங்கே போனோம். ‘கண்ணே கலைமானே..’ பாட்டு அறிவிப்பு வந்தது. அப்போது பக்கத்தில் வந்த எம்.எஸ்.வி., ‘தம்பி, இந்தப் பாட்டுக்கு நான் ஆர்மோனியம் வாசிக்கட்டுமா..’ என்று குழந்தை மனதோடு கேட்டார்.

‘என்ன அண்ணா.. என்கிட்ட கேட்கிறீங்க..’ என்றேன். அந்தப் பாட்டுக்கு அவர் ஆர்மோனியம் வாசித்தார். ‘ஏழை என்றால் ஒரு வகை அமைதி.. ஊமை என்றால் ஒரு வகை அமைதி..’ என வரிகள் சன்னமாக கசிந்துகொண்டிருந்தது. அந்தப் பாடலில் ‘நானோ கிளிப்பேடு..’ என்ற வரி வந்தது. வாசித்துக்கொண்டிருந்தவர், ஓடிவந்து என்னை ஆரத்தழுவி முத்தம் கொடுத்து சிலிர்த்தார். ‘என்னய்யா மியூசிக் இது.. ஏதோ மாதிரி இருக்குய்யா.. கிரேட் ராஜா..’ என்று அங்கேயே வாழ்த்தினார். ரசிகர்களின் கைத்தட்டல் அடங்க பல நிமிஷங்கள் ஆனது. அது பெரிய மனசு’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com