இது பாடகி ஜென்ஸி. ஒரு நாள் ஜேசுதாஸ் அழைத்து வந்து இந்தப் பொண்ணு நல்லாப் பாடும்னு சிபாரிசு செய்தார். அன்றைக்கு மதியமே அவரைப் பாட வைத்தேன்.
பாடல்களும் ஹிட்டானது. ஒரு நாள் வாத்தியார் வேலை பார்க்கப் போகிறேன் என்று வந்தார்.
"ஏன்.. உனக்கு இந்த வேலை.. இங்கேயே பாடிக் கொண்டு இரு" என்றேன். "இல்லை... நான் போகிறேன்" என்று போனார்.
சுமார் 20 வருடங்கள் கழித்து வந்தவர், "சார்.. எனக்கு ஏதாவது பாட்டு வேணும்" என்றார். "அன்னைக்கே நான் போகாதே என்று சொன்னேன். நீ கேட்டியா? சரி பார்ப்போம் என்று சொன்னேன்."
- இளையராஜா