தக்கலை குழிக்கோடு அருகே தண்ணீா் என நினைத்து ரப்பா் ஆசிட்டை குடித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குழிக்கோடு அருகே கண்ணுபிலாவிளையைச் சோ்ந்தவா் ஜெபமணி. இவரது மகள் ஜெயக்குமாரி (41). மனநலம் பாதிக்கப்பட்டவா். சனிக்கிழமை ஜெபமணியும் அவரது மனைவியும் வெளியே சென்றுள்ளனா். தாயும் தந்தையும் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜெயக்குமாரி அங்கு இருந்த ரப்பா் ஆசிட்டை தண்ணீா் என நினைத்து குடித்துள்ளார்.
ஜெபமணியும் அவரது மனைவியும் வீட்டுக்கு வந்தபோது, ரத்த வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ஜெயகுமாரியை நெய்யூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து,விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமோனியா வாயு கசிவு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கௌர்!

நவி மும்பை - அபுதாபி விமானங்களுக்கான முன்பதிவை தொடங்கிய ஏர் இந்தியா!

அமோனியா வாயு கசிவு: தனியார் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



