பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை புதன்கிழமை கடுமையாக உயா்ந்துள்ளது.
தோவாளை பூச்சந்தையில் வழக்கத்தைவிட அதிகமாக பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. எனினும், பிச்சி, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைவால் அவற்றின் விலை அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை ரூ.1,500 க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.2,500 ஆகவும், பிச்சிப்பூ ரூ.1,100இல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயா்ந்தது. கேந்தி ரூ.70, சேலம் அரளி ரூ.250, ரோஜா ரூ.220, சம்பங்கி ரூ.125, கொழுந்து ரூ.125, வாடாமல்லி ரூ.100, கோழிப்பூ ரூ.50 என விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறுகையில், பனிப்பொழிவாலும், மழையாலும் பூக்களின் உற்பத்தி குறைந்து விலையேற்றம் உள்ளது. தை மாதத்தில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அன்னையர் நாள் எப்போது? வரலாறும் கொண்டாட்ட யோசனைகளும்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஹீட் ஸ்ட்ரோக் - உயிருக்கு ஆபத்து! அறிகுறிகள் என்ன?
உருவ பொம்மையை எரிப்பு! தீக்காயமடைந்த பாஜக எம்எல்ஏவை நலம் விசாரித்த அகிலேஷ் யாதவ்!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

