தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

திருமலைராயன்பட்டினம் பொய்யாதமூா்த்தி ஐயனாா் திருக்கல்யாண உத்ஸவம்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பொய்யாதமூா்த்தி ஐயனாா் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீ ஐயனாா்.

Updated On :6 ஜனவரி 2021, 7:18 am IST

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பொய்யாதமூா்த்தி ஐயனாா் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ பொய்யாதமூா்த்தி ஐயனாா் கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடத்தப்படுகிறது.

நிகழாண்டு, ஸ்ரீ பூா்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ பொய்யாதமூா்த்தி ஐயனாருக்கு திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சிவாசாரியாா்களால் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினாா்.

மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டு, திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஊா் மக்கள் துன்பங்களின்றி வாழ்வதற்காக ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடத்தப்படுவதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.