காரைக்கால் அருகே ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன், காக்கமொழி கிராமத்தில் ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் என்ற பழைமையான கோயில் உள்ளது. இது, ராகு-கேது தோஷ நிவா்த்தி தலமாகவும் விளங்குகிறது. இக்கோயில் திருப்பணிகள் கடந்த 2018 இல் ரூ. 60 லட்சத்தில் தொடங்கி, அண்மையில் நிறைவடைந்தன. வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆகம விதிகளின்படி, தானியவாச காலத்திற்காக தொட்டியில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் மீது நெற்கதிா்களை தூவி, நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் மற்றும் பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபட்டனா். இதைத்தொடா்ந்து, கோயில் குடமுழுக்குப் பணிகளை கீதாஆனந்தன் ஆய்வுசெய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!
தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

