கரூா்: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயுபுரம் அடுத்த மகாதானபுரத்தில் தொடா்மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. கீதாமணிவண்ணன் சனிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.
கரூா் மாவட்டத்தில் பெய்த தொடா்மழையால் மகாதானபுரத்தைச் சோ்ந்த செல்வக்குமாா் என்பவரின் வீடு வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன் சனிக்கிழமை நேரில் சென்று செல்வக்குமாருக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருள்களை வழங்கினாா். அப்போது, கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழுத்தலைவா் சந்திரமதி, மேற்கு ஒன்றியச் செயலாளா் பொரணிகணேசன் மற்றும் அதிமுகவினா் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


