சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

சிரி... சிரி...

'அவர் போலி அதிகாரின்னு எப்படிக் கண்டுபிடிச்சே?'

News image
Updated On :9 ஆகஸ்ட் 2026, 5:06 pm IST

'அவர் போலி அதிகாரின்னு எப்படிக் கண்டுபிடிச்சே?'

'எந்தத் துறையில் வேலை பார்க்கிறீங்கன்னு கேட்டேன்... அவர் அதற்கு 'மயிலாடுதுறை' ன்னு சொன்னார்!'



'உங்க கடையில ஸ்பெஷல் பரோட்டான்னு போட்டு இருக்கீங்களே... அதற்கும் சாதா பரோட்டாக்கும் என்ன வித்தியாசம்?'

'ஒரு நாள் வித்தியாசம், சார்!'



'குழாயில் தண்ணி வரலைன்னு எப்படிக் கண்டு

பிடிச்சே?'

'பால்காரன்கிட்ட அதிகமா பால் கேட்டேன்... இல்லைன்னு சொல்லிட்டான்.'



'டாக்டர், எந்த புக்கை எடுத்தாலும் தூக்கமாக வருது.'

'பேஸ்புக்கை எடுத்துப் பாருங்களேன்...'



'நீங்க ஏன் உங்க கட்சிக்கு பட்டாம்பூச்சி அப்படின்னு பெயர் வச்சிருக்கீங்க?'

'கரப்பான் பூச்சி இருக்கும்போது பட்டாம்பூச்சி இருக்கக் கூடாதா?'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.