எண்ண முடியா இலைகள் கொண்டே
எல்லாச் செடிகளும்
வண்ணப் பசுமை உடைகள் பூண்டே
உவகை காட்டுதே!
-
இலைகள் எல்லாம் இரவி நோக்கி
ஒளியை வாங்கியே
இனிமை மிக்கப் பச்சை யத்தை
உணவாய் ஆக்குதே!
-
ஆக்கிய உணவை ஆசை யோடு
யாருக்கு ஊட்டுது?
தூக்க மின்றி தம்மை வளர்த்தத்
தண்டிற்கு ஊட்டுதே!
-
தனக்குக் கிடைத்த நல்ல உணவால்
தண்டும் மகிழ்ந்தே
கணக்கே இன்றி பூவுக்கும் காய்க்கும்
கிளைக்கு அனுப்புதே!
-
நாமும் இந்த இலைகள்போல
நல்லன செய்தால்
நாளும் வளங்கள் நாட்டில் பெருகி
நமக்கே ஆகுமே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ. 50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 17 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்த முயன்ற 400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


