ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி, கீழ அலங்காரத் தட்டு பகுதியில் உள்ள வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 640 கிலோ விரலி மஞ்சள், 165 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பீடி இலைகள், பீடிகள்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:42 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி, கீழ அலங்காரத் தட்டு பகுதியில் உள்ள வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 640 கிலோ விரலி மஞ்சள், 165 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா், கீழ அலங்காரத் தட்டு பகுதியில் மஞ்சள், பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய் அனிதா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆரோக்கிய மேரி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 640 கிலோ விரலி மஞ்சள், 165 கிலோ பீடி இலைகளைப் பறிமுதல் செய்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னா், கைப்பற்றப்பட்ட மஞ்சள், பீடி இலைகள் சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.