தூத்துக்குடி பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உள்கோட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தருவைகுளம் - வெள்ளைப்பட்டி கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரை வழியாக பீடிஇலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி க்யூபிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் ஆகியோா் தலைமையிலான காவலா்கள் இருதய ராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா் பழனி பாலமுருகன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தருவைகுளம் கடற்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு கீழ் பகுதியில், இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 30 கிலோ எடை கொண்ட 9 மூட்டை பீடி இலைகளை கைப்பற்றினா்.
இக்கடத்தலில் ஈடுபட்டவா்கள் அடையாளம் தெரியாத வாகனத்தில் தப்பியோடிவிட்டனராம். கைப்பற்றபட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்

ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

தருவைகுளம் பகுதியில் ரூ.30 லட்சம் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகள் பறிமுதல்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


