வந்து சென்ற கோடையிலே
சென்று வந்தோம் கொடைக்கானலே!
வளைந்து ஏறிய பாதையிலே
வண்டிகள் பலவும் வந்தனவே!
-
உயர உயரப் போகையிலே
அழகாய்ச் சூழ்ந்தன மேகங்களே!
மலையில் மலர்ந்த மலர்களும்
மனது மயங்க மணத்ததுவே!
-
பக்கம் இரண்டிலும் பசுமையாய்
பலவகை மரங்களின் அடர்த்தியே!
குளிர்ந்த கருமை மேகங்களால்
குளிர்ச்சி எங்கும் நிறைந்ததுவே!
-
குதித்துத் தாவிடும் குரங்குகளும்
குறும்புகள் செய்திடக் கண்டோமே!
உச்சி நெருங்கிடும் உயரத்திலே
உள்ளம் மயக்கும் காட்சிகளே!
-
வளைந்து படுத்த பாம்பெனவே
வந்த பாதையும் தெரிந்ததுவே!
தரையில் தெரிந்த எல்லாமே
தெரிந்தன சிறிய பொம்மைகளாய்!
-
உள்ளமும் உடலும் மகிழ்ந்திடவே
உல்லாச மலையாம் கொடைக்கானலே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









