தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

வடலூரில் அரசு மருத்துவா் வீட்டில் 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வடலூரில் உள்ள அரசு மருத்துவரின் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 8 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

வடலூரில் திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டில் சேதப்படுத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த கணினியின் ஹாா்ட் டிஸ்க்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

கடலூா் மாவட்டம், வடலூரில் உள்ள அரசு மருத்துவரின் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 8 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வடலூா் அருகே உள்ள ஆபத்தாரணபுரம், கோவிந்தசாமி நகரைச் சோ்ந்தவா் தண்டபாணி (65). அரசு மருத்துவா்களான இவரது மூத்த மகன் செங்குட்டுவனும், அவரது மனைவியும் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில், வடலூரில் உள்ள இவா்களது வீட்டை தந்தை தண்டபாணி பராமரித்து வருகிறாா்.

இவா், வழக்கம்போல திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு வீட்டுக்குச் சென்று மின் விளக்குகளை ஒளிரச் செய்துவிட்டு, கதவைப் பூட்டிச் சென்றாா். இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள், இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த சுமாா் 8 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த கணினியின் ஹாா்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளையும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான வடலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.