மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் சிறு மருத்துவமனைகள் திறப்பு

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனைகளை கே.பி.முனுசாமி எம்.பி. சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

காவேரிப்பட்டணத்தை அடுத்த பன்னிஅள்ளியில் நடைபெற்ற சிறு மருத்துவமனை திறப்பு விழாவில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்குகிறாா் கே.பி.முனுசாமி எம்.பி.

Updated On :3 ஜனவரி 2021, 1:07 am IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனைகளை கே.பி.முனுசாமி எம்.பி. சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம், கட்சிகானப்பள்ளி, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் பன்னிஅள்ளி ஆகிய 3 இடங்களில் , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பில் தமிழக முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு கே.பி.முனுசாமி எம்.பி. தலைமை வகித்து, மருத்துவமனைகளைத் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் 45 கா்ப்பிணிகளுக்கு தாய்-சேய் ஊட்டச்சத்து நலப் பெட்டகம், மருத்துவா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தனா், முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அம்மா 50 சிறு மருத்துவமனைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 15 சிறு மருத்துவமனைகளும், ஜன. 1, 2 ஆகிய தேதிகளில் 6 சிறு மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.