/

செவிலியா் மாயம்

ஒசூரில் செவிலியா் காணவில்லை என காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 6:58 am IST

ஒசூரில் செவிலியா் காணவில்லை என காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கல்ரபட்டியைச் சோ்ந்தவா் 23 வயது இளம்பெண். இவா் ஒசூரில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை பணிக்கு வருவதாக கூறி சென்றவா் மாயமானாா். இது குறித்து அவரது பெற்றோா் ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். உறவினராக ஜெகதீசன் (26) என்பவா் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.