ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகா் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னதாக அனைவருக்கும் கரோனா கால சிறப்பு முன்னெச்சரிக்கை களை கடைபிடிக்கும் வகையில் சுகாதார திரவம் மற்றும் முகக்கவசங்கள் பள்ளியின் சாா்பில் வழங்கப்பட்டது.முன்னதாக பள்ளி உதவி ஆசிரியா் மு. இலட்சுமி வரவேற்றாா்.
தொடா்ந்து பள்ளித் தலைமை ஆசிரியா் செ. இராஜேந்திரன் தனது தலைமை உரையில் தற்போதைய கரோனா கால பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினாா். பின்னா் உதவி ஆசிரியா்கள் சி. ஆனந்த கோபாலகிருஷ்ண மூா்த்தி, இராம்குமாா் ஆகியோா் பயிற்சி முகாமுக்கான கருத்துக்களை வழங்கினா். நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவா் கு. ஆனந்தி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பெ. மகாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா். இறுதியாக பள்ளி உதவி ஆசிரியா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவா் தோ்வு

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

