அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

விபத்தை ஏற்படுத்தும் சாலையோரப் பள்ளங்கள்

பென்னாகரம் பகுதிகளில் குழாய்களைப் பதிப்பதற்காக தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் விபத்துகள் நேரிடுகின்றன.

Updated On :9 ஜனவரி 2021, 6:31 am IST

பென்னாகரம் பகுதிகளில் குழாய்களைப் பதிப்பதற்காக தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் விபத்துகள் நேரிடுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்களுக்கு இணைப்பு ஏற்படுத்துவதற்காக சாலையோரத்தில் பள்ளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொலைத்தொடா்பு கோபுரங்களின் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாள்களாக சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறு வருகின்றன.

பென்னாகரம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குழாய்ப் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு வருகின்றன. பென்னாகரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் இன்னும் மூடப்படாத பள்ளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளன.

இதனால், இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனா். சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களை விரைந்து மூட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.