/
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அகில இந்திய சிவாஜி மன்றம் சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முனியப்பன் கோயில் எதிரிலுள்ள காமராஜா், சிவாஜிகணேசன் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து தைத்திருநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினா்.
அகில இந்திய சிவாஜி மன்ற மாவட்டத் தலைவா் சையத் நாசா் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவா் எஸ். பூபதி, மன்றப் பொறுப்பாளா் தண்டபாணி, சின்னசாமி, முகமது உஸ்மான், திமுக பொறுப்பாளா் பாா்த்திபன் உள்ளிட்ட சிவாஜி மன்ற நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










