திருப்பாச்சேத்தி அருகே டி.வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் ஜெயராமன்(43). விவசாயியான இவர், கிராமத்திலுள்ள தனது வீட்டிலிருந்து நடந்து சென்றபோது மர்ம கும்பல் வழிமறித்து அவரை கம்பால் தாக்கியது. இச் சம்பவத்தில் அவர் தாடையில் பலத்த காயம் பட்டு அந்த இடத்திலேயே இறந்தார். பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. ஜெயராமன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஜெயராமன் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிந்து தப்பிச்சென்ற மர்மகும்பலை தேடி வருகின்றனர்.