47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மனைவி கழுத்தை நெரித்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்

நாகப்பட்டினம், நவ.15: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு (மேற்கு), சாயக்காரன் தோப்பு, பகுதியைச் சேர்ந்தவர் டி.குமார்(வயது 27). டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்கிறார். இவரின் மனைவி தாமரைச் செல்வி (வய

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:25 pm

சங்கர்

நாகப்பட்டினம், நவ.15: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு (மேற்கு), சாயக்காரன் தோப்பு, பகுதியைச் சேர்ந்தவர் டி.குமார்(வயது 27). டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்கிறார். இவரின் மனைவி தாமரைச் செல்வி (வயது 24) எட்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து மணம் புரிந்த இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் இன்று அதிகாலையும் தொடரவே, கோபத்தில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றார் குமார். பின்னர், தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சில நிமிடங்களில் வீட்டுக்கு வெளியே நின்று வாந்தி எடுத்தவரை அக்கம்பக்கம் இருந்தவர்கள் விசாரித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வாய்மேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.