புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாச்சாத்தி வழக்கில் ஆஜராகாத வனத் துறையினர் 3 பேருக்கு பிடிவாரண்ட்

தருமபுரி, செப்.26: வாச்சாத்தி வழக்கில் இதுவரை 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் 54 பேர் இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேரில் இன்று நீதிமன்றத்தில் 212 பேர் ஆ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:36 am

முருகன்

தருமபுரி, செப்.26: வாச்சாத்தி வழக்கில் இதுவரை 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் 54 பேர் இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேரில் இன்று நீதிமன்றத்தில் 212 பேர் ஆஜரானார்கள். மீதமுள்ள 3 பேர் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கைக் கையாண்ட சிபிஐ, இன்று ஆஜராகாத வனத்துறையைச் சேர்ந்த 3 பேரையும் கண்டுபிடித்து, 29ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது, எனவே, அந்த 3 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது தருமபுரி நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.