சாத்தூர், ஆக.10: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மினி வேன் ஒன்றுடன் தவறான பாதையில் வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோவில்பட்டி அருகே கழுகுமலை என்னும் இடத்தில் இருந்து இருக்கங்குடி கோயிலுக்கு வந்தவர்கள் ஒரு மினி வேனில் ஊர் திரும்பினர். அவர்கள் வந்த வேன், கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சின்னஓடைப்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே தவறான திசையில் வந்த அரசுப் பேருந்துடன் திடீரென மோதியது. இதில், வேனில் பயணம் செய்த தெய்வக்கனி(50), சுப்புலட்சுமி(40) இருவரும் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் கோவில்பட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

