யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் : ஆசிரியை மற்றும் சப் இன்ஸ்பெக்டரிடம் செயின் பறிப்பு

சேலம், ஆக., 14  : சேலத்தில் இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் இருந்தும், ஏற்காடு எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் இருந்தும் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்து

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:48 am

தங்கராஜா

சேலம், ஆக., 14  : சேலத்தில் இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் இருந்தும், ஏற்காடு எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் இருந்தும் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நிர்மலா புங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது ஆதூரை அடுத்து மஞ்சினி பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், நிர்மலாவின் கழுத்தில் இருந்த  8 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதேப்போல, சப் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி ஆவடி பட்டாலியனில் பணியாற்றி வருகிறார்.  ஏற்காடு எக்ஸ்பிரஸில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த போது மொரப்பூர் அருகே  ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த நந்தினியின் கழுத்தில் இருந்த 9 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஒருவர் ஓடிவிட்டார். இது குறித்து சேலம் ரயில்வே போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.