போதைக்கு அடிமையான நிலையில் தாய்க்கும் மகனுக்குமே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதுண்டாம். இந்நிலையில் ராஜா போதையில் தன் தாயை வெட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வீரம்மாள், அரிவாளால் தன் மகனை வெட்டியுள்ளார். பின்னர் வெட்டுப்பட்ட நிலையில் வீட்டுக்கு வெளியில் வந்து, மகனை வீட்டுக்குள் விட்டுப் பூட்டி, குடிசைக்கு தீ வைத்தார். இதில் மகன் ராஜா எரிந்து சாம்பலானார். வீட்டை விட்டு வெளியே வெட்டுப் பட்ட நிலையில் வந்த வீரம்மாளும், ரத்தம் அதிகம் வெளியேறியதால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.